வகுப்புகளை நடத்திய பிறகே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2020

வகுப்புகளை நடத்திய பிறகே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் மனு


மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகளை நடத்திய பிறகே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைக்கப் கோரி ஈரோடு மாவட்டம் கொங்கடை எனும் மலை கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி மீனாவின் தந்தை மாரசாமி பூசாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிபாளையத்தில் படித்து வரும் தனது மகள், ஊரடங்கு காரணமாக விடுதியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவசரகதியில் ஊர் திரும்பிய அவர், பாடப்புத்தகங்கள் எதையும் எடுத்து வர வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்வில் கலந்து கொள்ள போக்குவரத்து வசதிகள் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க கோரி கடலூரை சேர்ந்த இளங்கீரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் அனிதா சுமந்து அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதாராமலிங்கம், தங்கள் வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டார். மேலும் கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும் வசிக்கும் மாணவர்களுக்கு புத்துணர்வு ஏற்படும் வகையில், வகுப்புகள் நடத்திய பிறகே தேர்வு நடத்த வேண்டும் என முறையிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.

11 comments:

  1. முட்டாள்தனமான கோரிக்கை

    ReplyDelete
  2. ivanunga padikkama ooru suthitu iruppanunga, class vechu eluthanumam, syllabus mudichu 6 masam aga pothu, innum enna, hostel vittu varumbothu book eduthutu varalana athu govt mistake ila,
    veettuku pakkathula irukura school la sekkama thoorama sethathu yaru thappu

    ReplyDelete
  3. மாணவர்கள் கல்வியில் விளையாட வேண்டாம்.தயவுசெய்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தவிடுங்க.எல்லா மாணவர்களும் தேர்வு எப்போது நடத்தப்படும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.

    ReplyDelete
  4. Already it had taken more time. The students are in very depressed condition. Nearly 3 times the govt., Postponed the exam. Please conduct the exam as early as possible

    ReplyDelete
  5. please conduct 10th exam dont postpone

    ReplyDelete
  6. Please conduct exam, student will expecting
    Don't play to 10th students life

    ReplyDelete
  7. Govt school students should be given a short revision before tbe examination

    ReplyDelete
  8. படிக்காத மாணவர்கள் மட்டுமே இது போன்ற கோரிக்கைகளை முன் வைப்பார்கள். வீட்டில் இருந்து படிப்பதற்கு ந

    ReplyDelete
  9. Students life as well as teachers life is more important than exam. Students mental strength is that much enough to write board exam.

    ReplyDelete
  10. Either conduct exam as schedule ordrop at once as too much tention for the student

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி