வரும் கல்வி ஆண்டில் 30 % பாடத்திட்டம் குறைப்பு! பள்ளிகள் திறப்பு தாமதமாவதால் நடவடிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2020

வரும் கல்வி ஆண்டில் 30 % பாடத்திட்டம் குறைப்பு! பள்ளிகள் திறப்பு தாமதமாவதால் நடவடிக்கை!

தமிழ்நாட்டில் புதிய கல்வியாண்டில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை 30. சதவீத பாடங்கள் குறைக்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய கல்வியாண்டில் பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடங்களிலும் 30 சதவீதம் குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆசிரி யர்கள் , பாடநூல் எழுத்தாளர்கள் மற்றும் மாவட்டகல்வி பயிற்சி நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய ஒருகுழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் எந்தெந்த பாடங்களை குறைக்கலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வார்கள். ஒவ்வொருபாடத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதியோ அல்லது முக்கியத்துவம் இல்லாத பகுதியோ நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆசிரி யர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பாடத்தையும் ஆய்வு செய்து குறைப்பதற்கென்று 100 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்களது பரிந்து ரைகளை ஜூன் 3 - வதுவாரத்தில் கல்வித்துறையிடம் சமர்ப்பிக்க உள்ளார்கள். ஏற்கனவே புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆகவே முழுபாடத்திட்டங் களும் அவற்றில் இருக்கும் . தேவையற்ற பகுதி எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும். ஆகவே அந்த பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளை ஆசிரியர்கள் நடத்துவார்கள்.

4 comments:

  1. அப்போ 11th and 12th?!!

    ReplyDelete
  2. விளக்கங்களைத் குறைத்து பாடக்கருத்துகள் முழுவதும் மாணவர்களை சென்று சேர ஒவ்வொரு ஆசிரியரும் முயற்சி செய்ய வேண்டும்.
    அதுவே மாணவர்கள் நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

    ReplyDelete
  3. மிகுதியான விளக்கங்களை தவிர்த்து, நேர மேலாண்மையை பின்பற்றி அனைத்து பாட கருத்துக்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் முயற்சி செய்யவேண்டும். அதுவே மாணவர் நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

    ReplyDelete
  4. பாடங்களை குறைப்பதை விட பாடங்களை சுருக்குவது மிகுந்த பயனளிக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி