அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2020

அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி


பொதுத்தேர்வுக்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தேர்வுத்துறை அலுவலகம் தற்போது கதிகலங்கி போய் இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வுத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியான நிலையில், அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தெளிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று முன்தினம் தேர்வுத்துறையின் இணை இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அதிகாரிகள்மத்தியில் பீதி கிளம்பியது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதன் தொடர்ச்சியாக அந்த துறையின் இயக்குனருக்கும் கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறி சில நாட்களாக இருந்து வந்தது. அவர் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கும் கொரோனா இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி