'பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை': செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2020

'பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை': செங்கோட்டையன்


''தமிழகத்தில், தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், நம்பியூரில், நேற்று அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு, விரைவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்தியாவில், மூன்று லட்சம் பட்டயக் கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.ஆனால், ௧௦ லட்சம் பேர் தேவைப்படுகின்றனர். இதனால், தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 20 வரை, ஆன்லைனில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், வழக்கமாக அனைத்து பள்ளிகளும் ஜூனில் திறக்கப்படும். தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி