பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2020

பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வு முடிவுகள், ஜூலை, 16ல் வெளியிடப்பட்டன.


மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், நாளை முதல் வழங்கப்பட உள்ளது. மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து, பள்ளியின் முத்திரையிட்டு, தலைமை ஆசிரியர்கள் தங்கள் கையெழுத்திட்டு, மாணவர்களுக்கு நாளை முதல் வினியோகம் செய்ய உள்ளனர். இந்நிலையில், மாணவர்களும், தனித்தேர்வர்களும் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் வேண்டுமென விரும்பினால், இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வு மையங்கள் மற்றும் பள்ளிகள் வழியே, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய்; மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு, 305 ரூபாய்; ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும், 205 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் நகல் கேட்பவர்கள், தற்போது மறுகூட்டலுக்கோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.மாணவர்கள் விண்ணப்பித்தவுடன், விண்ணப்ப எண், பதிவு எண், விண்ணப்பித்த பாடங்கள், கட்டணம் ஆகியவை அடங்கிய ஒப்புகை சீட்டை மாணவர்களுக்கு தர வேண்டும். அவற்றை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி