பிளஸ் 2வில் விடுபட்ட பாடத்துக்கு நாளை மறு தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2020

பிளஸ் 2வில் விடுபட்ட பாடத்துக்கு நாளை மறு தேர்வு


பிளஸ் 2வில் ஒரு பாடத்துக்கு, தேர்வை எழுதாமல் விட்டவர்களுக்கு, நாளை மறு தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 24ல் பொது தேர்வு முடிந்தது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு, மார்ச் 24ல் அறிவிக்கப்பட்டது.அதனால், சில மாணவர்கள் மார்ச் 24ம் தேதி தேர்வை எழுதவில்லை. அந்த வகையில் 36 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, தேர்வு துறை சார்பில், மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.மொத்தம் 780 மாணவர்கள் மட்டுமே, தேர்வை எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கான மறுதேர்வு, நாளை தமிழகம் முழுவதும் நடக்கிறது.

விருப்பம் தெரிவித்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலேயே தேர்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 comment:


  1. இதையாவது சரியா செய்வீர்களா?
    செங்கோட்யைரிடம் பத்திரிக்கையளர் கேள்வி!

    https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/blog-post_25.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி