பள்ளிகளில் இலவச பை, பாடப்புத்தகம் ஆக., 3 முதல் வழங்க உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2020

பள்ளிகளில் இலவச பை, பாடப்புத்தகம் ஆக., 3 முதல் வழங்க உத்தரவு!



மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, பள்ளிகளில் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, இரண்டு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், வரும், 3ம் தேதி முதல், இலவச பாடப் புத்தகங்களையும், புத்தக பைகளையும் வழங்க வேண்டும்.ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதலிலும், பின், இரண்டாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலும், பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தக பைகளை வழங்க வேண்டும். பள்ளி வளாகங்களிலும், நுழைவாயிலிலும் கூட்டம் சேராமல், மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புத்தக வினியோகம் செய்யும், 'கவுன்டர்'களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு, அவர்களின் தனிமைப்படுத்தும் காலம் முடிந்த பின், பள்ளிக்கு வரவைத்து, புத்தகம் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. இந்த ஆட்சியாளர்கள் இப்படி ஒரு மோசமான ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கி வாரத்திற்கு 3 அரைநாள் என்றும் மாதத்திற்கு 12 நாட்கள் என்றும் வைத்துள்ளார்கள். ஒருவருக்கு 2 பள்ளிகள் என்றும் இரு இடங்களில் சம்பளம் என்றும் கூறிவிட்டு இப்போது ஒரே பள்ளியில் மட்டுமே சம்பளம். மற்ற நாட்களில் என்ன செய்வார்கள். மற்ற இடங்களில் வேலைசெய்ய அனுமதிப்பார்களா? கொடுக்கப்படும் சம்பளமாவது கால்வயிற்றுக்காகவாவது போதுமா? அனைத்திற்கும் அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகிறோமே இதில் மற்ற மாநிலங்கள் 10, 12, 18 ஆயிரம் என்றெல்லாம் கொடுக்கிறார்களே என்பதை ஒப்பிட்டுள்ளார்களா? வேலைவாய்ப்புகளே குறைக்கப்படும் சூழ்நிலையில் பகுதி நேர ஆசிரியர் வேலையாவது பார்ப்போம் என்று எத்தனை பேர் 45 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது தெரியாதா? தகுதி இல்லாதவர்கள் என்று கூறிவருகிறவர்கள் சென்ற ஆண்டு இதே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்பட்டுள்ளதை தெரிந்து கொண்டு பேசவேண்டாமா? தயவு செய்து அனைத்துப் பணியிடங்களையும் குறைத்துவிட்டு இப்போது மத்திய மாநில அரசுகள் அனைத்து பணிகளையும் தொகுப்பு ஊதியத்தில் தனியாரைவிட குறைவான 7000 ரூபாய்க்கு நிரப்பிவரும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இப்படி உள்ள சூழ்நிலையில் 9 ஆண்டுகளாக அரசிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கும் வேலையில் நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக குரல் கொடுங்கள் அரசை நோக்கி. அதைவிட்டுவிட்டு பகுதி நேர ஆசிரியர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். இப்படி ஒரு மோசமான வேலையில் சேர்ந்து 9 வருடங்களைத் தொலைத்துவிட்டோமே என்று அனைவரும் ஏங்கி வரும்போது இடையில் நீங்கள் ஏன்? பகுதி நேர கணிப்பொறி ஆசிரியர்கள் மற்ற நாட்களைவிட இப்போதும் கொரோனா சமயத்திலும் கூட அதே 12 நாட்கள் மட்டுமல்லாது தலைமையாசிரியர்களின் அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்து செய்து வருகிறார்கள் என்பதை யாரும் உணர்வதில்லை. எங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கே இந்த வேலைகளை பகுதி நேர ஆசிரியர்கள் செய்கிறார்கள் என்பதை தெரிந்தும் கண்டு கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். ஒரு புறம் தகுதித் தேர்விற்காக கடின உழைப்பை கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொருபுறம் வயது அதிகமான நிலையில் நல்ல தகுதி திறமை அனுபவம் இருந்தும் தற்போது ஆசிரியர்பயிற்சி முடித்துவிட்டு வருபவர்களின் மதிப்பெண்ணோடு ஒப்பிட்டு வேலைவாய்ப்பு கிடைக்க விடாமல் செய்த இந்த அரசை நொந்து கொண்டு இருப்பவர்கள் ஒருபுறம். இப்படி பலரும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் பகுதி நேர ஆசிரியர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்று அரசைக் கேளுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி