கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கையில் மாற்றம்: ஓபிசி இட ஒதுக்கீடு உள்ளிட்ட புதிய விதிமுறைகள் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2020

கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கையில் மாற்றம்: ஓபிசி இட ஒதுக்கீடு உள்ளிட்ட புதிய விதிமுறைகள் வெளியீடு!


கேந்திரிய வித்யாலயா சங்கதன் 2020 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து புதிய விதிமுறைகளை kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ''2020-21 ஆம் கல்வியாண்டில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு 2020-21 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இடமும் ஒதுக்கப்படும். அத்துடன் 3 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கே.வி. பள்ளிகளில் ஆன்லைன் குலுக்கல் முறையில் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் 2 முதல் 8-ம் வகுப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை இருக்கும். அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் குவிந்தால், குலுக்கல் முறையில் தெரிவு இருக்கும்.

9-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் 11-ம் வகுப்புக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும்.

கே.வி.யில் மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவுப் பணிகள் முடிந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா சங்கதன் இணையதளத்தில் முதல் சேர்க்கைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இடங்கள் காலியாக இருந்தால், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாணவர் சேர்க்கைப் பட்டியல் வெளியாகும்.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில், கேந்திரிய வித்யாலயாவில் இடம் கிடைப்பது சவாலான ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டில், கே.வி. பள்ளிகளில் இருந்த 1 லட்சம் இடங்களுக்கு, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி