விண்ணப்ப படிவத்தை நேரில் வழங்க கல்லூரிகளுக்கு தடை ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2020

விண்ணப்ப படிவத்தை நேரில் வழங்க கல்லூரிகளுக்கு தடை !



தனியார் கல்லுாரிகளில் விண்ணப்ப படிவத்தை நேரில் வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டதால், கல்லுாரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் பெற, மாணவர்கள் குவிந்துள்ளனர். இதை எதிர்பாராத கல்லுாரிகள், விண்ணப்ப படிவங்களை நகல் எடுத்து, மாணவர்களுக்கு வழங்குகின்றன.தற்போது, பஸ் வசதிகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து இல்லாததால், கல்லுாரிகளுக்கு வர, மாணவ - மாணவியர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ஊரடங்கு அமலில் உள்ளதால், கூட்டம் கூடுவதற்கும் அனுமதிஇல்லை.இது குறித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், அனைத்து கல்லுாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது.
இதை பின்பற்றி, தனியார் கல்லுாரிகளிலும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்ப படிவங்களை வழங்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி