நாளை 10ம் வகுப்பு ரிசல்ட் எஸ்.எம்.எஸ்.,சில் மதிப்பெண் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2020

நாளை 10ம் வகுப்பு ரிசல்ட் எஸ்.எம்.எஸ்.,சில் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. மதிப்பெண்கள் விபரம், குறுஞ்செய்தியாக, மாணவர்களின் மொபைல்போன் எண்களுக்கு அனுப்பப்பட உள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ல், பொதுத் தேர்வு நடத்தப்படவிருந்தது. கொரோனா பிரச்னையால், தேர்வை ரத்து செய்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.'தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுகின்றனர்; மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை சராசரியாக கணக்கிட்டு, மதிப்பெண்கள்வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:30 மணிக்கு வெளியாகின்றன. முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.மாணவர்கள், பள்ளிகளில் வழங்கிய உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்ட, மொபைல்போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.மாணவர்கள் தங்களின், தற்காலிக மதிப்பெண் சான்றிழ்களை, வரும், 17ம் தேதி முதல், 21 வரையிலான நாட்களில், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற்று கொள்ளலாம் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதேநேரம், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பங்கேற்காமல், வகுப்புகளுக்கும் சரியாக வராத மாணவர்களுக்கு, தேர்ச்சி வழங்கப்படாது. சிலர் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில், சில பாடங்களில் தேர்வு எழுதியிருந்தால், அவர்கள் சராசரி மதிப்பெண்ணுடன் தேர்ச்சி செய்யப்படுவர் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி