ரஷிய பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் ரஷிய துணை தூதர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2020

ரஷிய பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் ரஷிய துணை தூதர் தகவல்

தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் அலியக் என்.அவ்தீவ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-


ரஷியா பல்கலைக்கழகங்களின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேரவிரும்பும் மாணவர்கள், இந்திய அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி பிளஸ்-2 வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எனில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். பிளஸ்-2 வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.


இந்தியாவின் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புக்கு இணையாக, ரஷிய மருத்துவப் பல்கலைக்கழகங்கள் எம்.டி. என்ற பெயரில் இளநிலை மருத்துவப்பட்டங்களை வழங்குகின்றன. இதை ஆங்கில மொழியில் கற்க 6ஆண்டுகளும், ரஷியா மொழியில் கற்க 7 ஆண்டுகளும் வேண்டியிருக்கும். பல்கலைக்கழகங்கள் இளநிலை மற்றும் முதுநிலை என இருமட்டங்களிலும் என்ஜினீயரிங் மற்றும் மருத்துவப்பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையின் முதல் கட்டப் பணிகளை தொடங்கியுள்ளன.


ரஷிய பல்கலைக்கழகங்களில் நடப்புக்கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கு சேரவிருக்கும் இந்திய மருத்துவ மாணவர்களுக்கு, ‘இணையவழியில்’ பாடங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகள் வரும் செப்டம்பர், அக்டோபரில் தொடங்கி நடப்புக்கல்வியாண்டு முழுவதும் நடைபெறும். ரஷிய பல்கலைக்கழகங்களில் மருத்துவக்கல்விபயில விரும்புவோர் மேலும் தகவல்பெறவும், அதற்கான முன்பதிவை தொடங்கவும் www.studyabroadedu.com என்ற இணையதளத்தையோ 9282221221 என்ற செல்போன் எண்ணையோ தொடர்புகொள்ளலாம்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி