பள்ளிகள் திறப்பா? கல்வித் துறை விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2020

பள்ளிகள் திறப்பா? கல்வித் துறை விளக்கம்!


'தமிழகத்தில், பள்ளிகளை திறப்பது குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, 'டிவி' மற்றும் பிற தனியார், 'டிவி'க்கள் வழியே, 'வீடியோ' பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள், பல்வேறு செயலிகள் வழியே, 'ஆன்லைன்' வகுப்பை நடத்துகின்றன.இந்நிலையில், நவம்பரில் பள்ளிகளை திறக்கவும், காலாண்டு, அரையாண்டு தேர்வை ரத்து செய்யவும், பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளதாக, நேற்று தகவல்கள் பரவின. 

இது தொடர்பாக, பள்ளி கல்வித் துறை அளித்துள்ள விளக்கம்:பள்ளிகளை திறப்பது குறித்து, அரசு இன்னும் உரிய முடிவு எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். பள்ளிகள் திறப்பு குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து, பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி