பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள் இன்ஜி., 2ம் ஆண்டில் சேரலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2020

பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள் இன்ஜி., 2ம் ஆண்டில் சேரலாம்

 'டிப்ளமா மற்றும் பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்களை, இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டில், அனைத்து பாடப் பிரிவுகளிலும் சேர்க்கலாம்' என, கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்திஉள்ளது. 


இது தொடர்பாக, தொழில்நுட்ப பல்கலைகள், மாநில உயர் கல்வித்துறை மற்றும் இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இன்ஜினியரிங் படிப்பு, இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில், டிப்ளமா மற்றும் பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்களை, குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மட்டுமே சேர்ப்பதாகவும், விரும்பும் பாடப்பிரிவுகளில் சேர்ப்பதில்லை என்றும் புகார்கள் வருகின்றன.


ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின் படி, டிப்ளமா முடித்த மாணவர்கள், குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தால், அவர்களை, இன்ஜினியரிங் படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்க்கலாம். இன்ஜினியரிங்கில் எந்த பாடப்பிரிவிலும், இரண்டாம் ஆண்டு சேர்க்கை வழங்கலாம். விரும்பும் பாடப்பிரிவில் காலியிடங்கள் இருக்கும் நிலையில், இடம் வழங்க மறுக்கக்கூடாது.


டிப்ளமா தொழிற்கல்வி படித்தவர்களை மட்டும், அவர்களுக்கு பொருத்தமான பாடப்பிரிவில், இரண்டாம் ஆண்டு சேர்க்கை தர வேண்டும்.அதேபோல, பி.எஸ்சி., முடித்தவர்களுக்கும், நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்க்கை வழங்கலாம். அவர்கள், முதலாம் ஆண்டுக்கான இன்ஜினியரிங் வரைகலை, இன்ஜினியரிங் ஓவியம் மற்றும் மெக்கானிக்ஸ் போன்றவற்றை, இரண்டாம் ஆண்டில் சேர்த்து படிக்க அனுமதிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி