பி.ஆர்க்., கவுன்சிலிங் பதிவுக்கு நாளை கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2020

பி.ஆர்க்., கவுன்சிலிங் பதிவுக்கு நாளை கடைசி

 

பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளை முடிகிறது.


தமிழகத்தில் உள்ள கட்டட அமைப்பியல் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில், முதலாம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப் படுகிறது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், இந்த கவுன்சிலிங்கை நடத்துகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, செப்டம்பர், 8ல் துவங்கியது. நாளையுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது. 


பிளஸ் 2 முடித்து, 'நாட்டா' என்ற தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கலாம். இதையடுத்து, சான்றிதழ் பதிவேற்றம் அறிவிக்கப்படும் என, கவுன்சிலிங் சேர்க்கை குழுவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி