Anna University - செமஸ்டர் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2020

Anna University - செமஸ்டர் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..


அண்ணாப் பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத் தேர்விற்கான கட்டணத்தை செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடிக் கலை கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் நடப்பு பருவத்திற்கான கல்விக் கட்டணங்களை வருகிற செப்டம்பர் 19 -ஆம் தேதி வரையில கட்டலாம் என கால அவகாசத்தை பல்கலை கழகம் நீடித்துள்ளது.


மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதேபோல்  அண்ணா பல்கலைக் கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில்  படிக்கும் மாணவர்கள் இந்தப் பருவத்திற்கான கட்டணத்தை செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கட்ட வேணடும் என அறிவிக்கப்பட்டது.


ஆனால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி