கொரோனாவுக்கு தலைமை ஆசிரியை உயிரிழப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2020

கொரோனாவுக்கு தலைமை ஆசிரியை உயிரிழப்பு.

 

கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசிரிப்பள்ளியைச் சேர்ந்தவர் பெல்லாரம் பள்ளி உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த மாதம் 31ந் தேதி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு

தீவிர சிகிச்சை அளித்தும்

பலனின்றி நேற்று காலை

அவர் உயிரிழந்தார். அரசு

வழிகாட்டுதலின்படி தாசிரப்பள்ளியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


மேலும் கிருஷ்ணகிரி நெசவுக்காரத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர், பந்தாரப்பள்ளி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆகியோருக்கும் கொரோனா

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊத்தங்கரை காவல் நிலையல் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவல்நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி