பள்ளிக் கல்வி - மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் - தேசிய பசுமைப்படை - ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் (NGC Coordinator) நியமனம் செய்தல் - அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பார்வையில் காணும் கடிதத்திற்கிணங்க , சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்திட , மத்திய சுற்றுச்சூழல் , வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய பசுமைப் படை ( National Green Corps - NGC ) எனும் திட்டத்தினை தமிழக பள்ளிகளில் செயல்படுத்திட தமிழக வனத் துறை மாநில தொடர்பு நிறுவனமாக ( State Nodal Agency ) செயல்பட்டு வருகிறது. மேலும் , தமிழகத்தில் வருவாய் மாவட்டத்திற்கு 250 தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றங்கள் வீதம் மொத்தம் 8000 தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றங்கள் 32 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. மேற்படி , தேசிய பசுமைப் படை திட்டத்திற்கு நிதி புது டெல்லி , மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி