TNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2020

TNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி

 


தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரர், பதவி படைத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த தமிழகத்தின் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 


இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலச்சந்திரனும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். இதையடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி