அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32ஆக உயர்வு: தமிழக அரசு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2020

அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32ஆக உயர்வு: தமிழக அரசு உத்தரவு!



 தமிழகத்தில் அரசு துறைகளில் பல்வேறு நிலைகளில் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமும், வேலைவாய்ப்பு அலுவலகம்  மூலமும் நிரப்பபடுகிறது. அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், மிகவும்  பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் பணியிடங்களுக்கும் 30 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பாண்டு  மற்றும் வரும் ஆண்டுகளில் அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவது கடினமான காரியம். எனவே, இந்த தேர்வுக்காக காத்திருந்தவர்கள்  வயது வரம்பினை காரணம் காட்டி அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.  ஏற்கனவே, அரசு காலி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு செய்த இடங்களில் அவர்கள் இல்லை எனும் பட்சத்தில் அந்த  இடங்கள் பொதுப்பட்டியலில் சேர்க்கப்படுகிறது. இதனால், காலி பணியிடங்களில் அவர்களால் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. 


இந்த சூழலை  கருத்தில் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பை 30 வயதில் இருந்து 32 வயது ஆக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை  எழுந்தது. இதையேற்று பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா வயது வரம்பை 32 ஆக உயர்த்தி உத்தரவிட்டு அரசாணை  வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில், அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர், மிகவும்  பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. ST.XAVIER'S ACADEMY,
    NAGERCOIL, CELL:8012381919.
    TNEB Accountant- Online class
    STUDY MATERIALS AVAILABLE.
    1. Unit wise study material
    2. Concept wise explanation
    3. Multiple choice questions
    4. Answer with explanation
    5. Total 1046 pages

    ReplyDelete
  2. இந்த அதிமுக அரசு எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போதெல்லாம் பணி நியமனத் தடைச் சட்டம் இயற்றி 5 வருடத்தைக் கடத்துவார்கள். வாழ்வில் படித்தவர்களுக்கு 5 வருடங்கள் இவர்களால் வீணாகிவிடும் ஒவ்வொருமுறையும். தற்போது பத்தாண்டுகளாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு பணி நியமனத் தடைச்சட்டம் கொண்டுவராமல் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்தார்கள். இப்படி குறைக்கும் போது ஏழைகளின் வாழ்வாதாரத்தை பெரும்பாலும் உயர்த்தும் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வயதும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போது வயதை 40 என்று நியமிக்கும் போது 30 வயதில் இவர்களின் ஆட்சி ஆரம்பம். தற்போது பத்தாண்டு கடந்து 40 வயது ஆனதும் இவர்களின் ஆட்சியில் தான். 7 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அப்படியே பணியிடங்கள் அறிவித்தாலும் அவற்றில் குளறுபடி செய்து வழக்குப் பதியச் செய்து அந்த பணியினை நிறுத்தி வைத்துவிடுவார்கள். எங்கும் தொகுப்பூதியம் என்று கொண்டுவந்து கொத்தடிமைகளை உருவாக்கியவர்கள் இவர்கள் தான். படித்தவர்கள் சிந்தித்து உணரவேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி