7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலவாய்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2020

7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலவாய்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன்.



 7.5% இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தெரிவித்தார்.


ஈரோடு மாவட்டம் கொளப்பலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்கும் வகையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முதல்வர் இயற்றினார்.


 இதன் மூலம் அரசுப் பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளது.


தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்துதான், நீட் தேர்வின் 180 கேள்விகளில், 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.


 இ-பாக்ஸ் மூலம் நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. இந்த தேர்வை முதன்முறையாக எழுதி தோல்வியடைந்தவர்கள், 2-வது முறையாக எழுத வாய்ப்புள்ளது.


 அவ்வாறு எழுதும் மாணவர்கள், அரசின் இலவச பயிற்சி வகுப்பில் சேர முடியாது. தேவைப்பட்டால் தனியார் மையங்களில் பயிற்சி பெற்று தேர்வு எழுதலாம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி