பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2020

பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு.

 


பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் மூலம் நிரப்புகின்றது. அந்தவகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு தேர்வுகளில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது


அதன்படி 1,334 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கான நேர்காணல் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான நேர்முகத் தேர்வு அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி மற்றும் கைத்தறித்துறை முதுநிலை மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல் அக்டோபர் 16ந் தேதியும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 7 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டதோடு நேர்முகத் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.


முழுமையான விபரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம் என்று அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. இந்த நேர்முக தேர்வு ஒழுங்கா நடத்துங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி