ஆசிரியர் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம் என்ற தண்டனைக்காக அரசு ஊழியரை விருப்ப ஓய்வு பெற தடுக்கக்கூடாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2020

ஆசிரியர் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம் என்ற தண்டனைக்காக அரசு ஊழியரை விருப்ப ஓய்வு பெற தடுக்கக்கூடாது.



சேலம் கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 37 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றியவர் ராஜூ. 2019ல் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து விருப்ப ஓய்வு வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசார ணைக்கு வந்தது. துறைரீதி விசாரணையில் ராஜுவின் செயலுக்கு கண்டனம் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டதால் விருப்ப ஓய்வு வழங்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வக்கீல் நீலகண்டன் ஆஜராகி , துறை ரீதியான நடவடிக்கைகளில் கண்டனம் தெரிவிப்பது என்பது மிக பெரிய தண்டனை இல்லை என்று வாதிட்டார். இதை பதிவு செய்த நீதிபதி , இந்த காரணத்தால் விருப்ப ஓய்வு வழங்கவில்லை என் பதை நீதிமன்றம் ஊக்குவிக் காது . எனவே , ஆசிரியர் ராஜூக்கு விருப்ப ஓய்வு வழங்குவது தொடர்பாக 2 வாரங்களுக்குள் நாமக்கல் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி