அனைத்து பல்கலைகளிலும், 'அரியர்' தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட உயர் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2020

அனைத்து பல்கலைகளிலும், 'அரியர்' தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட உயர் கல்வித்துறை உத்தரவு.

 கல்லுாரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், அனைத்து பல்கலைகளிலும், 'அரியர்' தேர்வு முடிவுகளை, விரைவில் அறிவிக்கும்படி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் செமஸ்டர் தேர்வுகளை, தமிழக உயர் கல்வித்துறை ரத்து செய்தது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், 'ஆன்லைனில்' தேர்வு நடத்தப்பட்டது. மற்றவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்கப் பட்டது.இதன்படி, சென்னை பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 285 கல்லுாரிகளில், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும், ஆல் பாஸ் வழங்கி, 'ரிசல்ட்' வெளியிடப்பட்டு உள்ளது.


இதன்படி, அனைத்து பல்கலைகளும், அரியர் தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட வேண்டும் என, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகள் என, அனைத்திலும், முதுநிலை படிப்புக்கு மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளதால், இளநிலை முடிவுகளை வெளியிட உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


'ஆல் பாஸ்' முடிவில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகளை, முதுநிலை படிப்பில் சேர்க்கவும், கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, மாணவர் சேர்க்கையை, நவம்பர் முழுதும் நடத்த, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. இறுதி(6 வது) பருவ தேர்வு எழுதியவர்கள் அதில் pass ஆகிட்டா 1முதல் (5வாது)பருவ அரியர் இருந்தால் பாசா

    ReplyDelete
  2. MEd first year arrear pass poduvangala matangala?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி