பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய மாணவர்கள் செய்ய வேண்டியது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2020

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய மாணவர்கள் செய்ய வேண்டியது!

 


பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தி.மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்ய ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில் எடுத்து வர வேண்டும். வரும் 28-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு பணி நடைபெற உள்ளது. மேலும். www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறையின் இணையதள வழியாக பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி