தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் , என்ஜினீயர்கள் , மருத் துவர்கள் உள்ளிட்டோருக்கு உயர்கல்வி தகுதிக்காக ஊக்க ஊதியம் ( அட்வான்ஸ்டு இன்கிரிமென்ட் ) வழங்கப்படுகிறது. அதுபோல் , கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்ற சார்நிலைப் பணியாளர்களும் ஊக்க ஊதியம் பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் , அரசு ஊழியர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு கடந்த மார்ச் 10 - ந் தேதி அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் , பேராசிரியர்களுக்கும் பொருந்துமா ? என்ற குழப்பம் எழுந்தது. அதைத் தொடர்ந்து இதற்கான விளக்கத்தை அளித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவை ஒன்றை வெளியிட்டார்.
அதில் , அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை , ஆசிரியர்கள் , பேராசிரியர்கள் , என்ஜினீயர்கள் , மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். கடந்த மார்ச் 10 - ந் தேதிக்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி