தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவுப் பணியாளர்களுக்கான தேர்வு நடைமுறை நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.
இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
கொரானாவை காரணமாக சொல்லாதீங்க. 5 லட்சம்,7 லட்சம்,10 லட்சம் என பேரம் பேசி அமைப்பாளர் வேலை, சமையலர் வேலைகளை விற்பனை செய்து கல்லா கட்டிய பிறகு சம்பந்தம் இல்லாத காரணம் சொல்றீங்க.
ReplyDeleteYes
ReplyDeleteகௌரவ பிச்சை (பிச்சை எடுப்பவன் அரசன் பிச்சை கொடுப்பவன் ஆண்டி)
ReplyDeleteஅடுத்த ஆட்சியை பிடிக்க பிச்சை எடுத்து இந்த அரசு!! சீனியாரிட்டி வைத்து பணி நியமனம் செய்ய வேண்டியது தானே...MGR இததான செய்தாரு இந்த செயலில் அவரை பின்பற்றலாமே இந்த ஊழல் அரசு...
ReplyDeleteசரியாக சொ்னீர்கள்
Delete