ஆன்லைன் ரம்மி ” ( Online Rummy ) போன்று இணையவழி விளையாட்டுகளை தடைசெய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2020

ஆன்லைன் ரம்மி ” ( Online Rummy ) போன்று இணையவழி விளையாட்டுகளை தடைசெய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

 

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் , திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் " ஆன்லைன் ரம்மி ” ( Online Rummy ) போன்று இணையவழி விளையாட்டுகளை தடைசெய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.



 ' ஆன்லைன் ரம்மி ” ( Online Rummy ) போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து ஈடுபடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக , இளைஞர்கள் தங்களது பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் அவலத்தை தடுக்கும் விதமாக இந்த அரசு ஒரு அவசர சட்டத்தை ( Ordinance ) இயற்ற உள்ளது. 


இந்த அவசர சட்டம் ( Ordinance ) , 1930 - ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் , 1888 - ம் ஆண்டு சென்னை நகரக்காவல் சட்டம் மற்றும் 1859 - ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றிற்கு சட்டதிருத்தங்கள் மேற் கொள்வதன் மூலம் கீழ்கண்ட நோக்கங்களுக்காக இயற்றப்பட உள்ளது :


 i ) இவ்விளையாட்டில் பணம் வைத்து ஈடுபடுவோரையும் அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை தடை செய்யவும் ; 

ii ) இத்தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ .5,000 / - அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கவும் ; 

iii ) ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் ( Online gaming house ) வைத்திருப்போர்களுக்கு ரூ .10,000 / -அபராதமும் இரண்டு சிறைத்தண்டனையும் வழங்கவும் ; 

iv ) இவ்விளையாட்டில் பணப்பரிமாற்றங்களை இணைய வழி மூலம் மேற்கொள்வது தடுக்கவும் ; 

v ) இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் , தண்டிக்கவும் இந்த அவசர சட்டம் ( Ordinance ) வழி வகுக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் , திரு . பன்வாரிலால் புரோகித் அவர்கள் “ ஆன்லைன் ரம்மி ” ( Online Rummy ) போன்ற இணையவழி விளையாட்டுகளை தடைசெய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி