2020-2021 ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Secondary| & Elementary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2020

2020-2021 ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Secondary| & Elementary) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள்

 

ஒருங்கிணைந்த கல்வி , விழுப்புரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா , B.Sc. , M.A.B.Ed . , ந.க.எண் . 577 / S & S / ஒக / 2020 

நாள் : 18.12.2020 . 

பொருள் : ஒருங்கிணைந்த கல்வி - விழுப்புரம் மாவட்டம் 2020-2021 ஆம் கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ( Secondary Elementary ) பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு . 

பார்வை : மாநிலத்திட்ட இயக்குநர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , சென்னை -6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் .539 / C6 / SS / 2020 , 

நாள் : 12.11.2020 . & பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி , 2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக , “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு " ( Safety & Security at School Level ) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் திட்ட ஏற்பளிப்புக் குழுவால் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது .

 இதன் உயரிய நோக்கம் , உலக அளவில் கோவிட் - 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில் , பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும் , தன்சுத்தத்துடனும் , பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும் . எனவே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக , பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் அனைத்து வட்டார வளமையங்களுக்கு 1758 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்காக இணைப்பில் காணும் அட்டவணைப்படி நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது . வழிகாட்டுதல்கள் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டியவை : 1. மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து நிதி விடுவிக்கப்பட்டவுடன் சார்ந்த பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நிதியை விடுவித்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் செய்யப்பட வேண்டும் .





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி