90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2020

90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியது.

 


90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையத்தைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக் கூடத்தின் வாயிலாக, தமிழகத்தில் உள்ள 90 அரசு கலைக் கல்லூரிகளில் திறந்தநிலைக் கல்வி கற்போர் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்குத் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அரசாணை (எண். 150) வெளியிட்டுள்ளது. இதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்வி கற்போர் உதவி மையம்  தொடங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்துத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.சரவணக்குமார் கூறும்போது, ''அரசு கலைக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ள கல்வி கற்போர் உதவி மையங்கள் மூலமாக, பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக்கூடத்தில் நடத்தப்படும் 38 முதுநிலை பட்டப்படிப்புகள், 42 இளநிலை பட்டப்படிப்புகள், 20 டிப்ளமோ படிப்புகள், 140 சான்றிதழ் படிப்புகள் மற்றும் குறுகிய காலப் படிப்புகள் கற்பிக்கப்பட உள்ளன.

இவை அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீரிக்கப்பட்ட பாடப் பிரிவுகள் ஆகும். அரசுப் பணியில் சேருவதற்குத் தகுதியுடை படிப்புகள் இவை. இணையவழி வகுப்புகள் மூலமாகப் படித்து பட்டம் பெறலாம்'' என்றார்.

இதுகுறித்துக் கல்வி கற்போர் உதவி மைய அரசு கலைக் கல்லூரி  ஒருங்கிணைப்பாளர் எம்.புகழேந்தி கூறும்போது, ''பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் வரும் டிச.31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவோ, அரசுக் கல்லூரியிலோ சேர்ந்து கொள்ளலாம். பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99433-75556, 98947-39777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி