GO NO : 122 - மாவட்ட கல்வி அலுவலர்கள் , முதன்மைக்கல்வி அலுவலராக தற்காலிக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2020

GO NO : 122 - மாவட்ட கல்வி அலுவலர்கள் , முதன்மைக்கல்வி அலுவலராக தற்காலிக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு!

 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி- முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் காலி பணியிடங்களை நிரப்புதல் -மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த காலி பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல்- ஆணை வெளியீடு அரசாணை எண் : 122 , நாள் : 15.12.2020




 பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில் , பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III- ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் தற்போது காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு , தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி வகுப்பு IV- ஐச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் பணி முதுநிலையில் முந்துரிமையில் உள்ள கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் விதி 6 ( 1 ) -ன்படி மாவட்டக் கல்வி அலுவலர் பணி நிலையில் மூன்று ஆண்டு கால பணிக்காலத்தை நிறைவு செய்யாததால் , அவர்கள் பொருட்டு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் விதி 6 ( 1 ) -க்குத் தளர்வு அளித்து , தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள் ) சட்டம் , 2016 பிரிவு 47 ( 1 ) -இன்கீழ் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பதவிகளுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்து , அவர்கள் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது . கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் இத்தற்காலிக பதவியுயர்வு பின்வரும் காலத்தில் முன்னுரிமை கோரும் உரிமையை அவர்களுக்கு அளிக்காது என்ற நிபந்தனைக்குட்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி