தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிகளில் அடங்கிய, 733 காலியிடங்களை நிரப்ப, 2019 ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதில், 52 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு பொதுப்பணி மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தில், திட்ட அலுவலர் மற்றும் சிறை உளவியலாளர், சிறை அலுவலர் பணிக்கு, 2019 டிசம்பரில் தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ளவர்கள், வரும், 9 முதல், 16க்குள், 'இ- - சேவை' மையங்கள் வழியாக, அசல் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். நேர்காணல் பதவிக்கு, 16ம் தேதி நேர்காணல் நடத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி