தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரை: சுகாதாரத்துறையினர் வழங்க நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2021

தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரை: சுகாதாரத்துறையினர் வழங்க நடவடிக்கை

 

தமிழகத்தில் நாளை மறுநாள் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று மொத்தம் 11 ஆயிரத்து 600 பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பயிலும் 18லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வர உள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமாக மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரைகளை சுகாதாரத்துறையினர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் நாளை மறுநாள் மாணவர்களுக்கு வழங்க வைட்டமின் மாத்திரைகளை தயார் படுத்தி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 92 லட்சத்து 130 வைட்டமின் மாத்திரைகளும், ஒரு கோடியே 92 லட்சத்து 130 ஜிங்க் மாத்திரைகளும் என மொத்தம் 3.84 கோடி மாத்திரைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி