எம்.பி.பி.எஸ் . , பி.டி.எஸ் . படிப்புகளுக்கான இரண் டாம் கட்ட கலந்தாய்வு வரும் 4 - ஆம் தேதி தொடங்குகிறது . நிவர் புயல் காரணமாக 6 நாள்கள் மருத்துவக் கலந்தாய்வு தடைபட் டது.பின்னர் , நிலைமை சீரடைந்தபிறகு மீண்டும் பொதுக்கலந்தாய்வு தொடங்கி 8 நாள்கள் நடைபெற்றது . அதன் பின்னர் எஸ்சி , எஸ்டி பிரி வினருக்கும் , ஐஆர்டி பெருந்துறை , வேலூர் சிஎம்சி கல்லூரி இடங்க ளுக்கும் , நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற் றது . இந்நிலையில் , இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 4 - ஆம் தேதி தொடங்குகிறது . அன்றைய தினம் , அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது . 5 ஆம் தேதி முதல் 11 - ஆம் தேதி நண்பகல் வரை அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கும் , 11 - ஆம் தேதி பிற்பகல் முதல் 13 - ஆம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது . இந்த கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்கள் , முதல்கட்ட கலந்தாய்வில் அனுமதி கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பாமல் இருந்த இடங்கள் ஆகியவை நிரப்பப்படவுள்ளன . அகில இந்திய ஒதுக்கீட் டில் இருந்து திரும்ப கிடைத்துள்ள 148 இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது .
Jan 2, 2021
Home
kalviseithi
மருத்துவப் படிப்புகள் : ஜன .4 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
மருத்துவப் படிப்புகள் : ஜன .4 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
எம்.பி.பி.எஸ் . , பி.டி.எஸ் . படிப்புகளுக்கான இரண் டாம் கட்ட கலந்தாய்வு வரும் 4 - ஆம் தேதி தொடங்குகிறது . நிவர் புயல் காரணமாக 6 நாள்கள் மருத்துவக் கலந்தாய்வு தடைபட் டது.பின்னர் , நிலைமை சீரடைந்தபிறகு மீண்டும் பொதுக்கலந்தாய்வு தொடங்கி 8 நாள்கள் நடைபெற்றது . அதன் பின்னர் எஸ்சி , எஸ்டி பிரி வினருக்கும் , ஐஆர்டி பெருந்துறை , வேலூர் சிஎம்சி கல்லூரி இடங்க ளுக்கும் , நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற் றது . இந்நிலையில் , இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 4 - ஆம் தேதி தொடங்குகிறது . அன்றைய தினம் , அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது . 5 ஆம் தேதி முதல் 11 - ஆம் தேதி நண்பகல் வரை அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கும் , 11 - ஆம் தேதி பிற்பகல் முதல் 13 - ஆம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது . இந்த கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்கள் , முதல்கட்ட கலந்தாய்வில் அனுமதி கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பாமல் இருந்த இடங்கள் ஆகியவை நிரப்பப்படவுள்ளன . அகில இந்திய ஒதுக்கீட் டில் இருந்து திரும்ப கிடைத்துள்ள 148 இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது .
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி