டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2021

டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..?

 


ஜனவரி 25ஆம் தேதி டிஜிட்டல் வாக்காளர் அட்டை என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது. இந்தச் சேவை மூலம் வாக்குப்பதிவு செய்ய மக்கள் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதன் மூலம் ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் டிஜிட்டல் முறையில் பெறுவது போல் வாக்காளர் அட்டையும் டிஜிட்டல் முறையில் பெற முடியும். சரி டிஜிட்டல் வாக்காளர் அட்டையை எப்படி டவுன்லோடு செய்வது என்பதை இப்போது பார்ப்போம். 


இண்டர்நெட் இணைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் அல்லது கம்பியூட்டர் அடிப்படைத் தேவையாக உள்ளது. 5 மாநில தேர்தல் இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 5 மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 


புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அனைவரும் பெற முடியா..?


இதை வைத்து வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய முடியுமா..? 


டவுன்லோடு செய்வது எப்படி..? 


கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ பயன்படுத்தவும். 


https://voterportal.eci.gov.in/ 


https://nvsp.in/Account/Login


இணையதளத்தில் login செய்ய வேண்டும்.


இந்தத் தளத்தில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி-யை கொண்டு ஒரு கணக்கைத் துவங்க வேண்டும்.


கணக்கைத் துவங்கிய பின்பு லாக் இன் செய்த உடனேயே உங்கள் கணக்கில் டவுன்லோடு E-EPIC (Electronic Electoral Photo Identity Card) என்ற ஆஃப்ஷன் இருக்கும். இதைக் கிளிக் செய்ய வேண்டும்.


இந்த டிஜிட்டல் சேவை தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 தேதி காலை 11.14 மணி முதல் மக்களின் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஜனவரி 31 வரை முதல்கட்டமாக இந்தச் சேவை புதிய வாக்காளர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. வாக்காளர் அட்டையைப் பெறுவதற்காக மொபைல் நம்பர் உடன் பதிவு செய்துள்ள வாக்காளர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரையில் வழங்கப்படும். மொபைல் நம்பர் உடன் பதிவு செய்தவர்களுக்குத் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள இரண்டு தளத்தில் இருந்து டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்ய முடியும். 


அனைவருக்கும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண்-ஐ இணைத்துள்ள அனைவரும் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை மேலே குறிப்பிட்டு உள்ள வழிமுறையைப் பயன்படுத்தி டவுன்லோடு செய்துகொள்ள முடியும். மொபைல் நம்பர் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண்-ஐ இணைக்காதவர்கள் உங்களின் தரவுகளைத் திருத்தி அல்லது சரிபார்க்கப்பட்டுத் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண் இணைக்கப்பட்ட பின் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்யும் சேவையைப் பெறலாம்.


டவுன்லோடு செய்யப்படும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை pdf பார்மெட்-ல் இருக்கும். பாதுகாப்புக் காரணிகள் இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையில் QR கோட் இருக்கும், இந்த QR கோட்-ல் வாக்காளரின் புகைப்படம், அவரது பிராந்திய தகவல், முகவரி ஆகியவை இருக்கும். மேலும் இதைப் போலியாகத் தயாரிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ள காரணத்தால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அது மட்டுமல்லாமல் இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அரசின் டிஜிலாக்கர் சேவையில் பதிவேற்றம் செய்து பாதுகாக்கவும் முடியும்.

11 comments:

  1. இந்த ஆட்சி அமைந்தால் பி.எட் படித்த FRESHERS -க்கு உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். சீனியாரிட்டியில் வேலை கிடைக்கும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். ஆக மொத்தம் படித்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம். மத்திய அரசு வழிகாட்டுதலின்படி இவர்களது நியமனங்கள் அனைத்தும் 7000 8000 என்ற அவுட்சோர்சிங் முறையிலேயே நடைபெறுகிறது. வேலை கிடைக்காமல் இருக்கும் அனைவரையும் கொத்தடிமைகளாக வைத்து நியமிக்கும் வேலையை செய்து ஏழைகளின் அரசுப் பதவி கனவைத் தகர்த்துவிட்டது இந்த அரசு இந்த 10 வருடங்களில்…..விரைவில் … விரைவில் … இந்த மாத இறுதிக்குள்…. இன்னும் இரண்டு வாரத்தில் …. என்று சொல்லிச் சொல்லியே பி.எட் படித்தவர்களின் பத்தாண்டு கனவு தகர்ந்துவிட்டது…

    ReplyDelete
    Replies
    1. வெற்றி நடை போடும் தமிழகம்

      Delete
  2. இந்த ஆட்சி அமைந்தால் பி.எட் படித்த FRESHERS -க்கு உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். சீனியாரிட்டியில் வேலை கிடைக்கும் என்று எண்ணியவர்களுக்கும் ஏமாற்றம். ஆக மொத்தம் படித்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம். மத்திய அரசு வழிகாட்டுதலின்படி இவர்களது நியமனங்கள் அனைத்தும் 7000 8000 என்ற அவுட்சோர்சிங் முறையிலேயே நடைபெறுகிறது. வேலை கிடைக்காமல் இருக்கும் அனைவரையும் கொத்தடிமைகளாக வைத்து நியமிக்கும் வேலையை செய்து ஏழைகளின் அரசுப் பதவி கனவைத் தகர்த்துவிட்டது இந்த அரசு இந்த 10 வருடங்களில்…..விரைவில் … விரைவில் … இந்த மாத இறுதிக்குள்…. இன்னும் இரண்டு வாரத்தில் …. என்று சொல்லிச் சொல்லியே பி.எட் படித்தவர்களின் பத்தாண்டு கனவு தகர்ந்துவிட்டது…

    ReplyDelete
  3. ஜனவரி மாத இறுதியில் முதலமைச்சர் ஒரு நல்ல செய்தி அறிவிப்பார் என்று சொன்னார்களே என்ன ஆனார்கள் அவர்கள் எல்லாம்?

    ReplyDelete
  4. மே மாதம் இறுதிக்குள் தகுதி தேர்வில் வென்ற அனைவரும் ஒரு நல்ல முடிவை தமிழகத்திற்கு தருவார்கள்.

    ReplyDelete
  5. மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களே இந்த தமிழ்நாட்டில் 10 கோடிக்கு மேல் மக்கள்தொகை இருந்தாலும் உங்களுடைய தகுதியை தீர்மானிப்பது இந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே தீர்மானிக்கமுடியுமே தவிர வேறு எவராலும் முடியாது

    ReplyDelete
  6. விரைவில் dmk ஆட்சி

    ReplyDelete
  7. Part time teachers life la Manali pota indha atchi ya sekarama veetuku anupanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி