TRB வழியே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை தனியே மேற்கொள்ள அவசியமில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2021

TRB வழியே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை தனியே மேற்கொள்ள அவசியமில்லை.

 

'ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை தனியே மேற்கொள்ள அவசியமில்லை' என தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்துஉள்ளது.


முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடந்த 2009- - 10ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே கணிதம்,அறிவியல் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தனியாக பணி வரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை.


தற்காலிக அடிப்படையில் வழங்கப்படும் நியமனங்களுக்கும் நீதிமன்ற வழக்குகள் மற்றும் வேறு சில நிர்வாக காரணங்களுக்காக வழங்கப்படும் நியமனங்களுக்கும் தனியே பணி வரன்முறை செய்யப்பட வேண்டும்.எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணி பதிவேடுகளில் உரிய பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி