வாரத்தில் 4 நாள் வேலை; விரைவில் வருகிறது புதிய வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2021

வாரத்தில் 4 நாள் வேலை; விரைவில் வருகிறது புதிய வசதி

 

விருப்பத்தின் அடிப்படையில், வாரத்தில் நான்கு நாளை மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்கும் புதிய வசதி விரைவில் வர உள்ளது. அதே நேரத்தில், வாரத்தில், 48 மணி நேர பணி முறையில் எந்த மாற்றமும் இல்லை.


மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை சார்பில், தொழிலாளர் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

விடுமுறை


இதற்கான வரைவு விதிகள் தயாரிக்கும் பணி இறுதிகட்டத்தில் உள்ளது. இதன் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களும், தங்கள் தொழிலாளர் விதிகளை மாற்றி வருகின்றன.



இது குறித்து, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலர் அபூர்வா சந்திரா கூறியதாவது:இந்த புதிய விதிகளின்படி, ஒரு வாரத்தின் வேலை நாட்களை, நான்கு நாட்களாக குறைத்து கொள்ளலாம். இதை, சுய விருப்பத்தின் அடிப்படையில், நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.


அவ்வாறு நான்கு நாட்கள் வேலை நாட்களாக இருக்கையில், மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். இந்த புதிய விதிகளின்படி, நான்கு அல்லது ஐந்து அல்லது ஆறு நாட்கள், வேலைநாட்களாக இருக்கலாம். அதே நேரத்தில், ஒரு வாரத்தில், 48 மணி நேர பணி என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

அனுமதி


இது கட்டாயமில்லை; நிறுவனங்களும், தொழிலாளர்களும் முடிவு செய்து கொள்ளலாம். வார வேலைநாட்கள் மாற்றுவது தொடர்பாக, அரசின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை.இதைத் தவிர, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அமைப்பு சாராத் தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கான, புதிய இணையதளம், ஜூனில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment:

  1. இது வசதி அல்ல. தொழிலாளர்களுக்கு வைக்கும் ஆப்பு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி