பேருந்துகளில் கூட்ட நெரிசலால் தொங்கிக்கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.. கேள்விக் குறியான கொரோனா கட்டுப்பாடுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2021

பேருந்துகளில் கூட்ட நெரிசலால் தொங்கிக்கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.. கேள்விக் குறியான கொரோனா கட்டுப்பாடுகள்

 

கொரோனா ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க உத்தரவிட்டது.


இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றது.இதில் பயில பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் பல்வேறு ஊர்களில் இருந்து பேருந்து மூலம் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் வருவது வழக்கம்.


கொரோனாவால் தமிழக அரசு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்து அதன்படி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் வீடுகளிலிருந்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வரும் மாணவர்கள் சில நேரங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் அனைத்து மாணவர்களுமே ஒரே பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


இதனை தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி, கல்லூரி நேரங்களில் சிறப்பு பேருந்துகளை வழங்கி மாணவர்களுக்கு கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி