பொது தேர்வு விபரம் பதிவேற்ற பள்ளிகளுக்கு அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2021

பொது தேர்வு விபரம் பதிவேற்ற பள்ளிகளுக்கு அவகாசம்

 


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்காக, மாணவர் விபரங்களை பதிவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்து, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, பள்ளிகள் வழியாக அரசு தேர்வு துறைசேகரித்துள்ளது.அதேபோல, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் விபரங்களை, பிப்., 1 முதல் இன்றைக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு, அரசு தேர்வுத் துறைஅறிவுறுத்தியது.பெரும்பாலான பள்ளிகள், இந்த பணிகளை முடிக்கவில்லை.


நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில், பெரும்பாலான பள்ளிகள் மாணவர் விபரங்களை பதிவேற்றுவது, தேர்வு கட்டணம் செலுத்துவது போன்ற நடைமுறைகளை முடிக்க முடியாத நிலைஏற்பட்டது.இந்நிலையில், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சில பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான விபரங்களை, இணையதளம் வழியே பள்ளிகள் தரப்பில் பதிவேற்றம் செய்வதற்கும், கட்டணம் செலுத்துவதற்கும் வரும், 18ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி