தொடக்க கல்வி துறையில் நாளை முதல் நடைபெறவிருந்த அனைத்து பதவி உயர்வு கலந்தாய்விற்கும் தடை - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2021

தொடக்க கல்வி துறையில் நாளை முதல் நடைபெறவிருந்த அனைத்து பதவி உயர்வு கலந்தாய்விற்கும் தடை - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

 


தொடக்க கல்வி துறையில் நாளை முதல் நடைபெறவிருந்த அனைத்து பதவி உயர்வு கலந்தாய்விற்கும் மாநில அளவில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தடைவிதித்துள்ளது


தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் மாறுதல் இன்றி பதவி உயர்வு மட்டும் அளித்து வெளியிட்ட கலந்தாய்விற்கான செயல்முறையை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் திரு.சண்முகநாதன் அவர்களால் 2 வழக்குகள் தொடரப்பட்டதில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று (26.06.2021) தடையாணை வழங்கியுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் மாறுதல் இன்றி பதவி உயர்வு  மட்டும் அளித்து வெளியிட்ட கலந்தாய்விற்கான செயல்முறையை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் திரு.சண்முகநாதன் அவர்களால் 2 வழக்குகள் தொடரப்பட்டதில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று (26.06.2021) தடையாணை வழங்கியுள்ளது.


*பணி முன்னுரிமை உள்ள ஆசிரியர்களுக்கும், சிறப்பு முன்னுரிமை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கும் பொதுமாறுதலில் முன்னுரிமை அளித்து மாறுதல் வழங்கும் அரசின் பழைய நடைமுறையை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் எவ்வித அரசின் வழிகாட்டுதலின்றி தாமாக ரத்து செய்துவிட்டு, பணியில் இளையவர்களுக்கு பதவி உயர்வினை மட்டும் வழங்கி வெளியிட்டுள்ள இயக்குனரின் உத்தரவுக்கு தடை கேட்டு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல் மிகு பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள் மதிப்புமிகு வழக்கறிஞர் திரு. G.சங்கரன் அவர்களின் மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று இரண்டு வழக்குகள் தொடுத்திருந்தார்கள். இது WP.NO. 4079, 4083 என்ற எண் கொண்ட வழக்காக இன்று  (26.02.2021) விசாரணைக்கு வந்தது. ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வில் எவ்வித பயணப்படியும் வழங்கப்படுவதில்லை, எவ்வித செலவினமும் அரசுக்கு ஏற்படுவதில்லை என நமது வழக்கறிஞர் அவர்களால் வாதிடப்பட்டது. வாதத்திற்குப்பின் வரும் செவ்வாய் வரை எந்த வித கலந்தாய்வும் நடைபெறக் கூடாது என தடை வழங்கி வழக்கினை வரும் செவ்வாய்கிழமைக்கு நீதிபதி அவர்கள் ஒத்தி வைத்தார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி