கல்வி தரம் உயர்த்த தனி குழுக்கள் பல்கலைகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2021

கல்வி தரம் உயர்த்த தனி குழுக்கள் பல்கலைகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு


 பல்கலைகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பேராசிரியர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து செயல்பட வேண்டும் என பல்கலை மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.


அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் துணைவேந்தர்கள், முதல்வர்களுக்கு பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., தலைவர் டி.பி.சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:நாட்டில் அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது கல்லுாரி நிர்வாகத்தினரின் பொறுப்பு. கொரோனா காலத்திலும் அனைத்து சவால்களையும் சமாளித்து 'ஆன்லைனில்' பாட வகுப்புகளை நடத்தி தேர்வையும் நடத்தி வருவது பாராட்டுக்குரியது.


அதேநேரம் தேசிய கல்வி கொள்கையின் படி கல்வியின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து விடக் கூடாது. அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளிலும் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் ஐந்து முதல் 10 பேர் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.இந்த குழுக்கள் கல்வி தர மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி