கற்போம் எழுதுவோம் தேர்வு தேதி 16.05.2021க்கு மாற்றம்
தமிழகத்தில் , 2020-2021ஆம் நிதியாண்டில் , 15 வயதுக்கு மேற்பட்ட , முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத 3.10 இலட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் கற்போம் எழுதுவோம் இயக்கம் , மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயின்று வருகின்ற கற்போருக்கு 27.03.2021 அன்று இறுதி அடைவுத் தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டது. நிருவாக காரணங்களினால் இத்தேர்வினை 16.05.2021 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தேர்விற்கென , மாவட்டத்தில் , பெறப்பட்டுள்ள வினா - விடைத் தாள் கட்டுகள் , வருகைப் பதிவுப் படிவம் , தேர்வு நடத்துதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பேனா இவை அனைத்தையும் முதன்மைக் கல்வி அலுவலா / வட்டார மேற்பார்வையாளர்களின் கோடிக் கண்காணிப்பில் இருக்கும் வகையில் உள்ள ஒரு அறையில் வைத்து , இரு பூட்டு முறையில் சீலிட்டு , மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை அறையினை எக்காரணங்கொண்டும் திறக்கக் கூடாது . மேலும் , கற்போம் எழுதுவோம் இயக்ககத்தின் கீழ் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்ற கற்போர்கள் அனைவரும் அவர்களுக்கேதுவான நேரத்தில் , கல்வி மையம் / வேலை பார்க்குமிடம் / வீட்டுவழிக் கல்வி ஆகிய ஏதாவதொரு நிலையில் கற்றல் , கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் வகையில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Please tamil subject matter all classes deatails include in grammar part poetry letter writing please
ReplyDelete