ஊரக வளர்ச்சி ( ம ) ஊராட்சி துறையில் கொரோனா நோய் தடுப்பு பணியில் முன்களப்பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட்டு , உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் நிவாரண நிதியினை பெற்று தருவதற்கு அரசுக்கு முன் மொழிவு அனுப்பிட ஏதுவாக பின்வரும் ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் முன்மொழிவினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் , கொரோனா நோய்தடுப்புப் பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட அலுவலர்கள் பணியின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக மரணமுற்றிருப்பின் ( இவர்கள் நோய் தொற்றாளராக இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை ) அவர்களது குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க முன்மொழிவு அனுப்பிட வேண்டும்.
1. கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் முன்களப்பணியாளராக பணிபுரிய பிறப்பிக்கப்பட்ட செயல்முறை ஆணையின் நகல் மற்றும் அச்செயல்முறைகளுக்கேற்ப கொரோனா நோய்தடுப்புப் பணியில் பணிபுரிந்ததற்கான சான்று.
2. கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான மருத்துவ பரிசோதனை சான்று
3. இறப்பு சான்று நகல் . ( கொரோனா நோய் பாதிப்பு என குறிப்பிட்டிருக்க வேண்டும் )
4. வாரிசு சான்று நகல்
5. குடும்ப அட்டை நகல்
6. கொரோனா நோய் தொற்று பணியின்போது விபத்து நேரிட்டது என்பதற்கான சான்று மற்றும் விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கையின் நகல்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி