வனக்காப்பாளர் பணிக்கு நியமன ஆணை எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2021

வனக்காப்பாளர் பணிக்கு நியமன ஆணை எப்போது?

 

வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி ஆணை எப்போது கிடைக்கும் என்ற, கேள்வி எழுந்துள்ளது. 


தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள், 2019 டிசம்பரில் துவங்கின. இதற்கு, 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, 2020 மார்ச்சில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, தொடர் நடவடிக்கைகள் முடங்கின.பின், 2021 ஜனவரி முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி திறன் தேர்வுகள் நடத்தப்பட்டன. பிப்., முதல் வாரத்தில் தரவரிசை அடிப்படையிலான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. 


சட்டசபை தேர்தல் அறிவிப்பு காரணமாக, அடுத்தகட்ட பணிகள் முடங்கின. தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தற்போதாவது இவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்படுமா என்ற, கேள்வி எழுந்து உள்ளது. புதிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமா என, தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி