உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2021

உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா மையம்

 கொரோனா தொற்றின் காரணமாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், கொரோனா கவனிப்பு மையங்கள் அமைக்க, அனுமதிக்கப்பட்டுள்ளது. 

 

கொரோனா தொற்றின், இரண்டாவது அலையால், நாடு முழுதும், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. நிலைமையை சமாளிக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு, 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டும் நடத்தலாம் என, அனுமதிக்கப்பட்டது.

 

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தேவைப்படும் இடங்களில், கொரோனா கவனிப்பு மையங்கள் அமைக்க, சுகாதாரத் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு, உயர் கல்வித் துறையும் அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் தேவைப்படும் இடங்களில், பல்கலை மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினருடன் பேசி, சில பகுதிகளை கொரோனா கவனிப்பு மையங்களாக செயல்படுத்தலாம் என, கூறப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி