11ஆம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2021

11ஆம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.

11ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தேர்வு ரத்து.




2021-2022 ஆம் கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து பார்வை 2 ல் உள்ள கடிதத்தின் வாயிலாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன. அவ்வழிகாட்டு நெறிமுறைகளில் பத்தி 4 ல் பின்வரும் மாற்றம் செய்யப்பட்டு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.


1 . பார்வை 1 ல் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் , தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


2. தற்போது அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு , மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் . அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் 


3 . கோவிட் -19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம்.

4 . மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ , அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் . மேலும் , பார்வை 2 ல் கண்டுள்ள சுற்றறிக்கையில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளவாறு 10 ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்தத்தேவையில்லை . 


5. பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜுன் 3 வது வாரத்திலிருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் துவங்கலாம் . மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளின் அடிப்படையில் , பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை நடத்திட அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் , 2021-2022 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி , உயர்தொழில்நுட்ப ஆய் கம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி