கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2021

கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு.

 

கிராமப்புறங்களில் வசிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன் டிஜிட்டல்' வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி வசதி கிடையாது


தமிழக பெண்கள் இயக்கத்தின் செயலர் எஸ்.வாசுகி தாக்கல் செய்த மனு:அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, போதிய நிதி வசதி கிடையாது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வசதியாக, அவர்களால், கணினி, மொபைல் போன் வாங்க முடியாது.தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், தவறாமல் ஆன்லைனில் பயிற்சி பெறுகின்றனர்.


ஏழை, விளிம்புநிலை மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில், டிஜிட்டல் வகுப்பு அறைகளை, பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தகுதியானவர்களை நியமித்து, கண்காணித்து இருக்க வேண்டும்.எனவே, பொருளாதார, சமூக ரீதியில் பின்தங்கிய மக்கள் வசிக்கும் கிராமப் புறங்களில், குடிசைப் பகுதிகளில், ஆன்லைன் டிஜிட்டல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும். 


மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை அமைத்து, பள்ளி கல்வியை மாணவர்கள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.முதல் பெஞ்ச்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜரானார். மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி