பள்ளி கல்வி அலுவலகங்களில், நியமனம் ஓரிடம்; வேலை வேறு இடம் என்று இருந்தவர்களின் மாற்றுப் பணி உத்தரவுகள், அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர் பொன்னையா அனுப்பி உள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வி துறை அலுவலகங்களில், பல்வேறு பதவிகளில் மாற்றுப் பணி உத்தரவு பெற்று, பலர் பணியாற்றி வருகின்றனர்.மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர், இதுபோன்ற மாற்றுப் பணிகளில் பணியாற்றுகின்றனர்.
அவர்களின் மாற்றுப் பணி உத்தரவு, நிர்வாக நலன் கருதி ரத்து செய்யப்படுகிறது. மாற்றுப் பணியில் உள்ளவர்கள் உடனே அந்த பணியில் இருந்து விடுவிப்பு பெற்று, தங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட, ஊதியம் பெறும் அலுவலக பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி