அப்பா உனக்காக இப் பா
அதிகமாய் உரையாடலற்று கிடக்கிற ஆத்மா
தாயினும் பரிவு காட்டுகிற தகப்பன் சாமி
குடும்பத்தையே தாங்கி தாங்கி தனக்கென ஏங்காத காந்தம்
கோபக்காரர்
அடிச்சிருவார்னு விளக்கப்பட்ட உங்கள் உருவியலை இன்னும்கூட மனனப் படுத்தியே வைத்திருக்கிறது
பிள்ளை மனசு
திருநாளோ
திருவிழாவோ
பிடித்த உணவோ
சினிமாவோ
யாவற்றுக்குமே
அம்மாவின் பின்னிருந்தே சம்மதம் வேண்டினாலும் முன்னிருந்து அழைத்துச் செல்லும் கரடுப்பலா நீ
எங்களின் மகிழ்விலே வாழ்கிறாய்
எங்களின் மகிழ்விற்கே வாழ்கிறாய்
ஆளாக்கி
வசதிபல காண வைத்தாலும்
சாய்வு நாற்காலியில் இன்னமும் கூட பெரும்பேச்சின்றியே இளைப்பாறுகிறாய்
உன்னோடு
விரல் பற்றி நடக்கக் கூட வியர்த்திருக்கிறேன்
இன்றோ
பேரன் பேத்திகளின் ஆனந்த களஞ்சியமாய் கிடக்கிறாய்
நிறையவே இழந்திருக்கிறேன்
அப்பாவின் மீது கட்டமைக்கப்பட்ட அளவற்ற பிம்பங்களால்...
சீனி.தனஞ்செழியன்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி