CA படித்தால் சிறப்பான சம்பளம்; பயிற்சி முடித்தாலே பணி வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2021

CA படித்தால் சிறப்பான சம்பளம்; பயிற்சி முடித்தாலே பணி வாய்ப்பு.

பட்டயக்கணக்காளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சி.ஏ., பயிற்சியை முழுமையாக முடித்தாலே, அனைத்து நிறுவனங்களிலும், நிச்சயம் பணிவாய்ப்பை பெறலாம் என, இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தென்னிந்திய பட்டய கணக்காளர் அமைப்பின் தலைவர் ஜலபதி கூறியதாவது:சி.ஏ., படிப்பு பிளஸ்2 முடித்து நேரடியாகவும், இளநிலை முடித்த பின்பும் சேர முடியும். பிளஸ்2 முடித்து நேரடியாக வரும் மாணவர்களுக்கு 'பவுண்டேஷன்' எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் எழுதவேண்டும்.இத்தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் மே, நவ., என இரண்டு முறை நடத்தப்படும். இளநிலை முடித்து வருபவர்களுக்கு இத்தேர்வு இல்லை; மற்ற விதிமுறைகள் பொதுவானது. பட்டம் முடித்து வருபவர்கள், வணிகவியல் பிரிவாக இருப்பின், 55 சதவீத மதிப்பெண்களும், வணிகவியல் அல்லாத பிற பாடங்களை சேர்ந்தவர்கள், 60 சதவீத மதிப்பெண்களையும் பெற்றிருக்கவேண்டும். பத்தாம் வகுப்பு முடித்ததுமே பதிவு செய்து கொண்டு, நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ளலாம்.கல்விமுறைமுதலில், பவுண்டேஷன் கோர்ஸ்' எனப்படும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். அடுத்து 'இன்டர்மீடியேட்' தேர்வு. இதன் பின் ஆடிட்டரிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று, இறுதி தேர்வு எழுத வேண்டும். பயிற்சி பெறும்போது மாதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. சி.ஏ., படிப்புக்கு ஆகும் செலவினம் மிகவும் குறைவு. வீட்டில் இருந்தபடியே பயிற்சி மேற்கொள்ள முடியும். பயிற்சி மையங்களுக்கும் சென்றும் படிக்கலாம்.நவ., மாத பவுண்டேசன் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், இந்திய பட்டயக்கணக்காளர் அமைப்பு சார்பில், 'ஆன்லைன்' மூலம், ஜூலை 15ம் தேதி துவங்கவுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பவுண்டேஷன் பயிற்சி வகுப்பு முழுமையாகவும், கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு, மூன்று நிலையும் சேர்ந்து பயிற்சி முழுமையாகவும் இலவசமாக வழங்கப்படுகிறது.


வேலைவாய்ப்பு'ஆடிட்டர்' என்று கூறப்படும் பட்டயக்கணக்காளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் அனைத்து துறை, தனியார் பிரிவில் சிறிய முதல் பெரிய நிறுவனங்கள், கல்விநிறுவனங்கள், மருத்துவமனை என அனைத்து துறைகளிலும் நிதி மேலாண்மை துறையில் அதிகாரிகளாக பணியில் சேரலாம். தனியாகவும் சொந்த அலுவலகம் அமைத்து பயிற்சியை துவக்கலாம். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு அதிகளவில் உள்ளது.வயது வரம்பு என்பது இல்லை. தேர்வில் வெற்றி பெறமுடியாமல் போனாலும், சி.ஏ., பயிற்சியை முழுமையாக முடித்தாலே, அனைத்து நிறுவனங்களிலும், 'அக்கவுன்டன்ட்' பிரிவில் நிச்சயம் பணிவாய்ப்பை பெறலாம். வெற்றி பெறும் வரை, முயற்சி மேற்கொள்ளலாம்.


இத்துறை சார்ந்த சந்தேகங்களுக்கு 96771-26011/8220522669 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி