+2 துணைத் தேர்வுக்கு நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வு இயக்ககம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2021

+2 துணைத் தேர்வுக்கு நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வு இயக்ககம்

 

12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளைமுதல் 27ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்திருக்கிறது.


12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மீண்டும் தனித்தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி நாளைமுதல் 27ஆம் தேதிவரை மாவட்டவாரியாக அரசு தேர்வுத்துறை சேவைமையம் மூலமாக மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்திருக்கிறது. மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்றும் அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்திருக்கிறது.


விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6ஆம் தேதிமுதல் 19ஆம் தேதிவரை நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது. +2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் துணைத்தேர்வை எழுத விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி